அப்பா தன் மகனிடம் சொல்கிறார்….
அப்பா: மகனே, நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத்தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்
மகன்: இல்லை அப்பா, நான் மணக்கப்போகும் பெண்ணை நானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன்.
அப்பா: சரி, ஆனால் நான் உனக்காக தேர்ந்தெடுத்திருக்கும் பெண் “பில் கேட்ஸின் மகள்”!
மகன்: ஓ…அப்படியா? சரி, நான் அவளையே திருமணம் செய்துகொள்கிறேன் அப்பா.
அடுத்த நாள், அந்த தந்தை பில் கேட்ஸை சந்திக்கச் செல்கிறார். அவர் பில்கேட்ஸிடம் ….
அப்பா: என்னிடம் உங்கள் மகளுக்கு ஏற்ற ஒரு கணவன் இருக்கிறார்
பில் கேட்ஸ்: ஆனால் என் மகளுக்கு இன்னும் கல்யாண வயது வரவில்லை.
அப்பா: அந்தக் கணவன் யார் தெரியுமா? அவர்தான் உலக வங்கியின் துணை ஜனாதிபதி
பில் கேட்ஸ்: ஓ அப்படியா? சரி, உங்கள் மகனுக்கு என் மகளை மணம் முடிக்க எனக்குச் சம்மதம்
இறுதியாக அந்தத் தந்தை உலக வங்கியின் ஜனாதிபதியைச் சந்திக்கச் செல்கிறார்….
அப்பா: எனக்குத் தெரிந்த ஒரு வாலிபனை உலக வங்கியின் துணை ஜனாதிபதியாக பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.
ஜனாதிபதி: மன்னிக்கனும்.ஏற்கனவே எனக்கு தேவைக்கு அதிகமான துணை ஜனாதிபதிகள் இருக்கிறார்கள்.
அப்பா: ஆனால், நான் கூறிய அந்த வாலிபன் வேறு யாருமல்ல, பில் கேட்ஸின் மருமகன்தான்!
ஜனாதிபதி: ஓ அப்படியா? சரி அவரையே துணை ஜனாதிபதியாக நியமித்து விடுகிறேன்.
இப்படித்தான் வியாபாரிகள் சாமர்த்தியமாகச் சம்பாதிக்கிறார்கள்.
Categories:
சிரிக்க
Main Menu
ORUPAKKAM. Powered by Blogger.
already read. but interesting. thanks
regards
ram
www.hayyram.blogspot.com
@ Ram
Thanks for your Comment
ச்சூப்ப்பபர்ர். தல